16 Sept 2015

வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

SHARE
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதி கடந்த 30 வருடங்களாக திருத்தியமைக்கப்படாது குன்றும் குழியுமாக காணப்படுகின்றது தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு, சின்னக்குளம், பாட்டாளிபுரம்,
  தங்கபுரம், இத்திக்குளம், வீரமாநகர், நல்லூர் சீனம்வெளி, உப்பூரல், சோலையூர், சம்பூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, இக்பால்நகர் இலங்கைதுறை முகத்துவாரம் (லங்காபட்டினம்) போன்ற பல்வேறு கிராம மக்கள், இந்த வீதியைத் தமது போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். 25 கிலோமீற்றர் நீளமுள்ள இவ்வீதியை சாதாரணமாக நாளொன்றுக்கு 6,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சேதமடைந்துள்ள இவ்வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு இக்கிராம மக்களால், வீதி அமைச்சு, மாகாண வீதி அமைச்சு, பிரதேச செயலகம் உட்பட ஆளும் கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற,  மாகாணசபை உறுப்பினர்களிடமும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு மகஜர்களும் கையளிக்கப்பட்டும் எவரும்; இதுவரை இதுபற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி, கடந்த வருடம் பாரிய ஆர்ப்பாட்டமும் முன்னேடுக்கப்பட்டது.

மாணவர்கள், நோயாளிகள்,  முதியவர்கள் போன்றோர் இதில் பெரிதும் பாதிப்படுகிறார்கள். தோப்பூர் வைத்தியசாலைக்கு நோயாளிகளை விரைவாகக் கொண்டு செல்ல முடியாத துர்பாக்கிய நிலையிலேயே இம்மக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
SHARE

Author: verified_user

0 Comments: