1 Sept 2015

வடக்கில் வாழும் கிழக்கு மாகாணத்தவர் சட்ட ஆவணங்களை பெற யாழ் மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

SHARE

வடமாகாணத்தில் வதியும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் தமது பிறப்பு,  இறப்பு சான்றிதலுக்கான பதிவுகள் மற்றும் திருத்தங்களுக்கான கோவைகளை  இனி யாழ் மாவட்டத்திலேயே சமர்ப்பிக்கலாமென  வடக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் J.ஆனந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண உதவிப்பபதிவாளர் நாயகம் கிழக்கு மாகாணத்திற்கும் பதில் கடமை ஆற்றுவதினால்  வடமாகாணத்தில் வதியும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் தமது பிறப்பு,  இறப்பு சான்றிதலுக்கான பதிவுகள் மற்றும் திருத்தங்களுக்கான கோவைகளை  யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வடக்கு வலய உதவிப்பதிவாளர் நாயகம் திணைக்களத்தினூடாகவே சமர்ப்பிக்க முடியுமென தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: