5 Sept 2015

எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டமைக்கு விஷேட வழிபாடு

SHARE
எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்காகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்காகவும் வாழைச்சேனை பொது மக்களால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜை நடாத்தப்பட்டது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் நாட்டு மக்களுக்காகவும் இவ் விஷேட பூஜை இடம் பெற்றதுடன் இன்றைய நினைவாக ஆலய வலாகத்தில் தென்னங்கன்று நடப்பட்டதுடன் பொது மக்கள் பட்டாசு கொழுத்தியும் தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினர். வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவாச்சாரியார் கோபாலப்பிள்ளை கபிலேஸ்வர குருக்கள் பூஜையினை நடாத்தி வைத்தார் 
SHARE

Author: verified_user

0 Comments: