5 Sept 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவிப்பு நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வவுணதீவில் வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு வவுணதீவு பிரதேச சபையின் சந்தைக் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை மேற்கு பிரதேச கிளைத் தலைவர் செ.அழகரெட்ணம், தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஜீ.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும், மாகாண சபை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: