இந்த சிறிய நாடான இலங்கைக்குள், நல்லாட்சி நிலவும் தற்போதைய சூழலில் இவ்வளவு அமைச்சர்கள் தேவைதானா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான அமைச்சுப் பதவிகள் மக்களுக்கு எந்தளவிற்கு நன்மையைக் கொண்டு சேர்க்கும். இந்த அமைச்சர்களுக்காக செலவளிக்கின்ற பணம் யாருடையது?எங்கிருந்து செல்கின்றது என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இந்த நிலையில், இவ்வாறான அமைச்சரவையில் கூட்டமைப்பினராகிய நாங்களும் சேர்நது கொண்டு கூத்தடிக்க முடியாது.
எங்களுடைய இனத்திற்கு தேவையான விடுதலை தொடர்பாக பலமான குரலை எழுப்ப வேண்டிய நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுணதீவு மக்களினால் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment