மட்டக்களப்பிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் தென்றல் சஞ்சிகை, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடாத்திய முன்னோடிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான நான்காவது தடவையாக நடாத்தும், பரிசழிப்பு விழா இன்று சனிக்கிழமை (05) மட்டக்களப்பு – கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில் நடைபெற்றது.
தென்றல் சஞ்சிகை நடாத்திய போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற 125 மாணவர்களுக்கு, இதன்போது சான்றிதழ் மற்றும், பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் முதலாம் இடத்தை 181 புள்ளிகள் பெற்று மட்.கொக்கட்டிச்சோலை இராகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த ச.டிதுர்சியா தங்கப் பதக்கதையும், இரண்டாம் இடங்களை மட்.வால்க்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேரந்த த.சோபினிகா 180 புள்ளிகளையும், மட்.கொக்கட்டிச்சோலை இராகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த நோ.சானுஜா 180 புள்ளிகளையும், பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், பெற்றுக் கொண்டனர்.
தென்றல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தொழிலதிபர் வி.ரஞ்சிதமூர்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment