12 Sept 2015

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

SHARE
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னம்பிள்ளைக் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 
சம்மாந்துறை புளக் 'ஜே' மேற்கு முதலாம் பிரிவில் வசித்து வந்த கூலித்தொழிலாளியும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான அலியார் முகம்மது இப்றாஹீம் (வயது 57) என்பரே இவ்வாறு உயிரிழந்தார். தென்னம்பிள்ளைக் கிராமத்தில் அமைந்துள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருக்கின்ற போதே இவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: