1 Sept 2015

வாகன விபதில் ஒருவர் காயம்

SHARE

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்டகளுதாவளையில் செவ்வாய்க் கிழமை (01) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எருவிலை சேர்ந்த இளையதம்பி சோமசுந்தரம்(வயது 65)என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். 

குறித்த நபர் மட்டக்களப்பில் உள்ள நீதிமன்றத்துக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த நபர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளைஇமுச்சக்கர வண்டி சாரதியை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: