10 Sept 2015

கிழக்கு மாகாண சபையின் பிரதேச சபைகளுக்கான நேரடி கள விஜயம்

SHARE
கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேச சபைகளுக்கான கள விஜயத்தின் இரண்டாம் நாள் கள விஜயங்கள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

செங்கலடி, கோறளைப்பற்று வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பிரதேச சபைகளுக்கு மேற்படி விஜயம் இடம்பெற்று, அங்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைச் செயலாளர்களுடன் ஒன்று கூடல் நிகழ்வும் இடம்பெற்றன.

உள்ளுராட்சி சபைகளின் செயற்திறன் மற்றும் அதன் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வது தொடர்பிலேயே இக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் உட்பட கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கோ.கருணாகரம், மா.நடராசா ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்களும், உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகளும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச சபைகளின் வினைத்திறன் தொடர்பில் அந்ததந்தப் பிரதேச செயலாளர்களினால் தெளிவுபடுதுத்தப்பட்டதுடன், அதிகாரிகளினால் பிரதேச சபைகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டு இது தொடர்பில் பிரதேச சபைகள் நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: