10 Sept 2015

கிழக்கு மாகாண சபை புதிய உறுப்பினர் அருண சிறிசேன ஆவணங்களை தவிசாளரிடம் கையளிப்பு

SHARE
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினரான திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான டாக்டர் அருண சிறிசேன மாகாண சபை அங்கத்தவருக்கான ஆவணங்களை இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கலப்பத்தியிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இம்ரான் மஹ்ரூப் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அவரின் இடத்திற்கே டாக்டர் அருண சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தலின் இம்ரான் மஹ்ரூப்பிற்கு அடுத்ததாக அகக் கூடுதலான வாக்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: