30 Sept 2015

சிறுவர் முதியோர் தின நிகழ்வு

SHARE
(க.விஜி, இ.சுதா)

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும்,  சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் இணைந்து நடாத்தும் சிறுவர் முதியோர் தின நிகழ்வு எதிர்வரும் நாளை வியாழக்கிழமை (01) காலை 9மணியளவில் களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதேச சிறுவர்கள், முதியோர்கள், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.என்.புள்ளநாயகம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், கு.சுகுணன் பிரதேச சமுர்த்தி முகாமையாளர் வி.வரதராஜன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.புவிதரன் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், முன்பள்ளி பாலர்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது முதியோர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் பாடல்கள், நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் பாடசாலைக் கல்வியினைத் தொடர்கின்ற மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் முகமாக தனவந்தர்களின் உதவி மூலமாகக் கிடைக்பெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன் பிரதேச ரீதியாக சிறுவர் முதியோர் பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான விளக்கங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

SHARE

Author: verified_user

0 Comments: