மட்டக்களப்பு மாநகர சபையில் கடந்த வாரம் முதல் முகப்பு அலுவலகச் செயற்திட்டம் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தரும் வரியிறுப்பாளர்களுக்கு முகப்பு மேசை அலுவலக முறையின் செயற்றிறனுடன் கூடிய சேவையினை வழங்கி மட்டக்களப்பு மாநகர சபை பற்றி பொது மக்கள் கொண்டுள்ள நல்ல அபிப்பிராயங்களை மேம்படுத்தும் முகமாக இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்போது மாநகர சபையின் அனைத்து பகுதித்தலைவர்களும் அலுவலக வாயிலில் ஆணையாளருடன் இணைந்து செயற்படுகின்றனர்.
மேற்படி நடவடிக்கையினால் மாநகர வரியிறுப்பாளர்களின் தேவைகள் மாநகர ஆணையாளர் அவர்களினால் சம்பந்தப்பட்ட பகுதிகளுடன் தொடர்புகொண்டு உடன் தீர்க்கப்படுவதுடன் வரியிறுப்பாளர்களுக்கு செயற்றிறனுடன் கூடிய சேவை வழங்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment