14 Sept 2015

உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் நடாத்தும் கட்டுரை கவிதைப் போட்டிகள்.

SHARE

ஒக்டோபர்  - 10 உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது. 

அங்கோடை மனநல வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் எம்.கணேசன் தலைமையின் கீழ் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் அனுசரணையில் நடாத்தப்படும் இப்போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூபா 15000.00, 10000.00, 5000.00 பணப்பரிசும் உளவியல் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.
“கௌரவமான உளநல சேவை” அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனும் தலைப்பில் ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரையும் இருபது வரிகளுக்கு மேற்படாமல் கவிதையும் எழுதப்படல் வேண்டும். வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ள அனைவரும் பங்குபெறக்கூடிய இப்போட்டியில் ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

ஆக்கங்கள் யாவும் ஒக்டோபர் மாதம்  - 10 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம், இல : 25ஃ3, 4ம் குறுக்குஇ கல்லடி – வேலூர், மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு : 0776984338, 0754362897 ஆகிய கைத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியம் என மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி பிரான்சிஸ் தேவரஞ்சினி தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: