அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய ஐந்து நபர்களில் ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஏனைய நான்கு நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் இன்று (31) திங்கட்கிழமை அபராதம் விதித்துள்ளார்.
அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் குறித்த நபர்கள் சனிக்கிழமை(29) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது. இதேவேளை,அக்கரைப்பற்று பிரதேசத்தில் சனிக்கிழமை(29) முச்சக்கர வண்டியொன்றில் நான்கு ஆடுகளை ஏற்றி வந்த நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது -
0 Comments:
Post a Comment