6 Sept 2015

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் நான்கு பேர் அனுமதிப்பு

SHARE
பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில்
சிறுவர் ஒருவரும் அடங்குவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை (05) மாலை நேரம் முதல் இன்று காலை வரை நான்கு பேர் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளதாகவும் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பேச்சாளரொருவர் கூறினார்.
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான எஸ்.மஹிந்த பால (வயது 48) கல்கடவெல-கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்தவரும் என்.பைரூஸ் கான் (வயது 27) 01ம் வட்டாரம் -நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவரும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 11 சிறுவனும் -மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த சரோஜா (வயது 39) என்பவரே பாம்பு கடிக்கு இலக்காகியவர்கள் எனவும் தெரியவருகின்றது.
வயல் காலங்களில் அதிகளவில் பாம்பு கடிக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: