22 Sept 2015

தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதற்காக வரவு செலவு திட்டத்தில் 6 வீதத்திற்கு மேலதிகமான ஒதுக்கீடு

SHARE

(க.விஜி)

தமிழ் பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மூலம் 6 வீதத்திற்கு மேலதிகமான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி தமிழ் மக்களின்; கல்வி வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு எமது நல்லாட்சி மிக்க அரசாங்கம் பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் தற்போதைய தேசிய அரசாங்கம் வேலை செய்தவற்கு உறுதி கொண்டுள்ளது. என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். 
அம்பறை மாவட்டத்தின், பெரிய நீலாவனை கிராம மக்கள் தேர்தலில் வாக்களித்தமைக்காகவும், வெற்றி பெற்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பி.ப 06.00 மணியளவில் பெரிய நீலாவனை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரிய நீலாவனை அமைப்பாளர் எம்.லோகராஜா தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பெற்றோலிய வள பிரதி அமைச்சர் திருமதி.அனோமா கமகே, விஷ்ணு வித்தியாலய அதிபர் திருமதி.சிவமணி நற்குணசிங்கம் மற்றும் கிராம பெரியார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
இதன் போது அமைச்சர் உள்ளிட்ட பிரமுகவர்கள் பெரிய நீலாவனை விஷ்ணு ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர். 
இந்நிகழ்வில் கலந்து கொண்டு  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பெரிய நீலாவனை கிராமம் சுனாமியினால் பாரிய பாதிப்புக்குள்ளான கிராமமாகும். இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் குறைபாடுகள், பௌதிக வளப் பற்றாக்குறைகள் போன்றவற்றை கடந்த ஆட்சியாளர்கள் செய்யத் தவறி விட்டனர். இதனால் இக்கிராம மக்கள் பல அசௌரியங்களுக்கு உட்பட்டனர். 

எனவே இக்கிராமத்தின் குறைபாடுகளை எழுத்து மூலம் எனக்கு அறியத்தாருங்கள் தமிழ் பேசும் மக்களின் கல்வி முறையானது அல்லது கல்வி வளர்ச்சியானது பல பௌதிக வளப் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது. இதனால் தமிழர்களின் கல்வி பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது. நான் நினைக்கின்றேன் தமிழ் பிரதேசத்திற்கு பெருவாரியான நிதியை ஒதுக்குவதற்கு நல்லாட்சி மிக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்களின் கூட்டுமுயற்சியினால் தமிழ் மக்களின் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் 6  வீதமான மேலதிகமான நிதியை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்து தமிழர்களின் கல்வியை குறைபாடுகள் இல்லாமல் தரமான கல்வியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.  இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவருடைய தேவையாக இருக்கின்றது. இந்த பிள்ளைகள் தான் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர். 

எனவே பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தவற்கும் விசேடமாக தமிழ் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கும் தீர்மானித்துள்ளோம். அது போலவே இப்பிரNதுசத்தில் தொழில் வாய்ப்புக்களையும், சுய தொழில்களையும் உருவாக்கவும் அதனை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

தொழில் திறமைகளையும் தொழிற்சாலைகளுக்கான இடவசதிகளையும் சரியாக குறிப்பிடும் போது இப்பிரதேசத்தில் ஒரு தொழிப்பேட்டைய உருவாக்க முடியும். இக்கிராமத்தில் நெசவு கைத்தொழில் மூலம் 1000 பேருக்கு தொழில் வழங்கக்கூடிய வாய்ப்பு என்னிடம் இருக்கின்றது. இது சம்பந்தமாக சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் அதுபற்றிய விபரங்களையும் இடவசதிகளையும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுள்ளேன். 

இது சம்பந்தமாக இக்கிராமத்திலுள்ள பெண்கள் ஒன்றிணைந்து பெண்கள் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சுயதொழில் முயற்சியாளர்களின் விபரங்களையும் படித்த இளைஞர் யுவதிகளின் விபரங்களையயும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்துவதன் மூலம் இக்கிராமத்தில் 1000 பேருக்கு தொழிலை வழங்க முடியும் என்றார். 
தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் தான் நன்றியையும் தெரிவித்துக் கொண்டர். இதன் போது அமைச்சர் அவர்களிடம் கிராமத்தின் பிரதிநிதிகள் தங்களை குறைபாடுகளை எழுத்து மூலம் அமைச்சர் தயாகமகே அவர்களிடம் கொடுத்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: