1990 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 158 தமிழர்களின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, சனிக்கிழமை (05) மாலை மட்டக்களப்பு அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் 1990 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரிநேத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment