கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு அரசாங்க சம்பளம் வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகளை கிழக்கு மாகாணசபை மேற்கொள்ள வேண்டுமென அம்மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றி வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களையும் இணைத்து நிரந்தர சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சரவை இணைந்து மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment