16 Aug 2015

வயல்களில் மழை நீர்

SHARE

சுழல் காற்றுடன் கூடிய மழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  உட்குளம், வளலவாய் போன்ற இடங்களிலுள்ள வயல்வெளிகளில்  நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு திடீர் என்று சுழல் காற்றுடன் கூடிய மழை ஏற்பட்டது.

இந்த வயல்வெளிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் அறுவடை மேற்கொள்வதில்; தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வயல்வெளிகளிலிருந்து மழை நீரை வெளியேற்றி வருவதாகவும்  அவ்விவசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன், ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைப்பதிலும் சிரமம் காணப்படுவதாவும் விவசாயிகள் கூறினர்.

SHARE

Author: verified_user

0 Comments: