ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பணம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாக மக்கள் தன்னிடம் முறையிட்டு கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
சில தகுதியான நபர்களுக்கு வேலைவாய்பை வழங்க லட்சக்கணக்கான ரூபா இலஞ்சம் பெற்றதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசியல் இலாபம் கருதி இனவாத ரீதியாக செயற்பட்டு வருவதாகவும் தயா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்
0 Comments:
Post a Comment