2 Aug 2015

சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானமடம் கட்டுவதற்குரிய அடிக்கல் நட்டுவைப்பு.

SHARE

முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சோ.கணேசமூர்தியின் சொந்த நிதிப் பங்களிப்பில் மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில்  அன்னதானமடம் கட்டுவதற்குரிய அடிக்கல் வெள்ளிக்கிழமை (31) நடப்பட்டது.

சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடத்தில் சமயல் செய்யக் கூடடிய வசதி, ஓரே தடவையில் சுமார் 1000 பேருக்கு
அன்னதானம் பரிமாறக்கூடடிய வசதிவாய்ப்புக்களுடன் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்  சோ.கணேசமூர்தி தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: