22 Aug 2015

ஹில்புல்லாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; மகஜரும் கையளிப்பு

SHARE

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவாகியுள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று சனிக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது.
ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றும் கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
ஹிஸ்புல்லாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பதவி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாலை காத்தான்குடியில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது இடம்பெற்ற மோதலில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: