10 Aug 2015

மட்டு. வாவியிலிருந்து சடலம் மீட்பு

SHARE

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவுள்ள வாவியிலிருந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வாவியில் சடலம் காணப்படுவதாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். 





பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
SHARE

Author: verified_user

0 Comments: