7 Aug 2015

மாமாங்கம் ஆலய திருவிழா ஆரம்பம்

SHARE

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று (05) கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.
இராம பிரான் மற்றும் இராவணண் வழிபட்ட ஆலயமாகவும் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகியவற்றை ஒருங்கேகொண்ட ஆலயமாக  ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது.இலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் ஆலயமாக பிரசித்திபெற்றுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.


ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு, கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நேற்றுக் காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூஜை மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை உள்வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்பத்தடியில் விசேட பூஜைகள் நடைபெற்ற வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப்பிழக்க நேற்றுப் பகல் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

 கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன. பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெறவுள்ளது.

 இந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 14ஆம் திகதி தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபை தலைவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: