தபால் திணைக்களம் குறுகிய காலத்துக்குள் தொழில்நுட்ப துறையில் துரித வளர்ச்சியடைந்துள்ளதாக அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் சீ.அருள்செல்வம், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் கடமையாற்றும் தபால் ஊழியர்களுக்கான (கோல உடை சிறுபணியாளர்கள்) பயிற்சி செயலமர்வு, மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொதுமக்களுக்கு விரைவாகவும் சிறப்பாகவும் சேவை வழங்குவதற்கு புதிய வேலைத்திட்டங்களான அலைபேசி மீள் நிரப்பல் மற்றும் இலங்கை மின்சார சபை கட்டணப்பட்டியலை சேகரித்தல் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தபால் ஊழியர்கள், பொதுமக்களுடன் சிறந்த முறையில் அணுகி அவ்வாறான வேலைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்ற வேண்டுமென்றார். இந்நிகழ்வில் கணக்காளர் என்.ஜெபராஜ், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பைஸர் ஆகியோர் வளவளார்களாக கலந்துகொண்டனர்
0 Comments:
Post a Comment