25 Aug 2015

போரதீவுப்பற்றில் காணி தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்தல்….வீடியோ

SHARE

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்ய்பபட்ட, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற முரண்பாடுகளுக்குப் பின்பு அரச காணிகளிலுள்ள பிணக்ககளைத் தீர்த்து வைக்கும், துரித வேலைத் திட்டத்தின்கீழ் செவ்வாக் கிழமை (25) மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப் பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாலையர் கட்டு கிராமத்தில் நடைபெற்றது.

மாலையர்கட்டு கிராம சேவை உத்தியோகஸ்தர் எஸ்.குகதாசனின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளர் எஸ்.லோகிதராசா, குடியேற்ற உத்தியோகஸ்தர் ஜி.ஜீவானந்தம் உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும், காலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது  118 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப் பட்டதோடு, இப்பகுதில் காணி தொடர்பாகக் காணப்பட்ட 90 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் குடியேற்ற உத்தியோகஸ்தர் ஜி.ஜீவானந்தம்  தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: