10 Aug 2015

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி

SHARE
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அணி திரள்வோம்' எனும் தொனிப்பொருளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம் பெண்கள் இணைந்து இந்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். 

'பெண் உரிமைகளை மதித்து நடக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்', 'தனது அரசியல் இலாபத்துக்காக கட்சி மாறாத வேட்பாளருக்கு வாக்களியுங்கள்', 'காணாமல் போகச் செய்தல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள் செய்யாத வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: