தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வளத்தாப்பிட்டியை சேர்ந்த 4 பேரை சனிக்கிழமை(15) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்த சவளக்கடை பொலிஸார், அவர்கள் பயணித்த வானையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
சவளக்கடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து சாளம்பைக்கேணி- 05ஆம் கொளனி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment