16 Aug 2015

தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தவர்கள்

SHARE
தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வளத்தாப்பிட்டியை சேர்ந்த 4 பேரை சனிக்கிழமை(15) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்த சவளக்கடை பொலிஸார், அவர்கள் பயணித்த வானையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

 சவளக்கடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து சாளம்பைக்கேணி- 05ஆம் கொளனி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையையும் சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: