கிழக்கில் சின்னக் கதிர்காமம் என போற்றப்படும் மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்றது.
கடந்த 2015.07.11 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழா, வெள்ளிக் கிழமை (31) இரவு இறுதி திருவிழா இடம்பெற்று சனிக்கிழமை (01) காலை நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.
இத்தீர்த்தோற்சவத்தில் நாட்டின் நாலா பக்கமும் இருந்த வந்த பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment