வழக்கம்போல் கடந்த 2006.09.02 அன்று எமது எமது சொந்தக் கிராமமான பழுகாமத்தில் அமைந்துள்ள கண்டுமணி மாவித்தியாலயத்திற்குச் சென்ற எனது 15 வயதுடை மகன் பாடசாலை முடிந்ததும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை.
என பழுகாமத்தைச் சேர்ந்த காணாமல்போன பிபிலனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஞாயிற்றுக் கிழமை (23) களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட விசாரணையின்போதே அவர் கலந்து கொண்டு ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ளார்.
வழக்கமாக பாடசாலைக்கு எனது மகன் எமது வீட்டிலிருந்து கால் நடையாகத்தான் செல்வார். அன்னயதினமும் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனது மகனைப் பிடித்துச் சென்றுள்ளார்கள். அன்றயதினம் எனது மகன் பாடசாலைக்குச் செல்லும் முன்ரே இடைவழியில் மறித்துத்தான் எனது மகனைப் பிடித்துச் சென்றுள்ளார்கள்.
பாடசாலைக்குச் சென்ற மகனைக் காணவில்லை என பிற்பகல் வேளையில் தேடியபோதே எமக்கு விபரம் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் எனது மகனைப் பிடிதுத்துச் சென்றுள்ளார்கள் என்று.
கொக்கட்டிச்சோலையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திலும், இலுப்படிச்சேனை, மற்றும் வவுனியா வரைக்கும் சென்று விசாரித்தோம் நாங்கள் உங்களது, மகனை நாங்கள் பிடிக்கவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் எம்மிடம் தெரிவித்தார்கள். எனது மகனுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது, தற்போது எனது மகன் பற்றிய தகவல்களை அறியவதற்கு அரசாங்கத்தினை நாடி நிற்கின்றோம். எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment