அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தம்வசம் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கல்முனை, மாளிகைக்காடு பௌசுல் வீதியைச் சேர்ந்த எம்.ஐ. அப்துல்மஜித் (வயது 50 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment