28 Aug 2015

குளவிக்கொட்டுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு

SHARE

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை குளவிக் கொட்டுக்குள்ளான  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புல்மோட்டையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் அன்ஸார் (வயது 30) என்பவரே குளவிக் கொட்டுக்குள்ளானார்.

இவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மீன்பிடிப்பதற்காக குளத்துக்கு சென்ற வேளை மரத்திலிருந்த குளவிக்கூட்டில் தலைபட்டதினால் குளவிகள் கலைந்துவந்து கொட்டியதாக தெரியவந்துள்ளது
SHARE

Author: verified_user

0 Comments: