திங்கட் கிழமை காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமாக நடைபெற்றுள்ளது. பி.ப. நான்கு மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பு மத்திய நிலையமாகக் காணப்படும் மட்.இந்துக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 கட்சிகளும், 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டனர்.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எமது தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் , பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில், மட்டக்களப்பில் 199 நிலையங்களும் , கல்குடாவில் 115 வாக்களிப்பு நிலையங்களும், பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுடிருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 9842 பேர் தகுதி பெற்றிருந்ததாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புக்காக மட்டக்களப்பு, கல்குடா , பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலுமாக, 176 நிலையங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment