23 Aug 2015

பொலிஸ் சீருடையில் வந்த ஒருவரும் சாதாரண உடையில் வந்த நான்கு பேர் கொண்ட வெள்ளைவேனில் வந்த குழுவினரே கணவனை அழைத்துச் சென்றனர்

SHARE

பொலிஸ் சீருடையில் வந்த ஒருவரும் சாதாரண உடையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே வீட்டில் இருந்த எனது கணவரை   விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது என  வெள்ளைவேனில் அழைத்துச்  சென்றனர். 

இதன்பின்னர் எனது கணவர்பற்றிய எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை தயவு செய்து எனது கணவரை கண்டு பிடித்துத்தாருங்கள் என காணமல் போன மகிழூரை சேர்ந்த ரவீந்திரன்(சமூர்த்தி உதவி முகாமையாளரின்)  மனைவி சிறிதேவி அவர்கள் ஆணைக்குழுவிடம் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.
கற்றுக் கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு அமைவாக அமைக்கபட்ட காணாமல் போனோரை  கண்டறியும் ஆணைக்குழுவின்  விசாரனை ஞாற்றுக் கிழமை (23)  களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது  சாட்சியமளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கையில்

எனது கணவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் அவர் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தில் சமூர்த்தி உதவி முகாமையாளராக கடமையாற்றி வந்தவர். 

கடந்த 2009.04.08 அன்று எனது கணவர் வீட்டில் இருந்தார் அன்றயதினம்இ காலையில் 9 மணியளவில் எனது வீட்டைசுற்றி விசேட அதிரடிப்படையினர் காணப்பட்டனர். அதனை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.  அதன் பின்னர் பிற்பகல் 1 மணியளவில் வெள்ளை வேனில் பொலிஸ் சீருடை அணிந்த ஒருவரும் அவருடன் சாதாரண உடை அணிந்த நான்கு போரும் வந்தனர் அந்த நேரம் எனது கணவர் வீட்டிற்குள் இருந்தார். வந்தவர்கள் எனது கணவரை அழைத்து  நீங்கள் ரவீந்திரனா என வினாவினர் அதற்கு அவர் ஆம் என பதிலளித்தார். அதன் பின்னர் உங்களிடம் சிறு விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது சேட்டை போட்டு வாருங்கள் என அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் எனது கணவனை நான் இன்னும் காணவில்லை.

நான் இது சம்பந்தமாக  பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டேன் ஆனால் முறைப்பாட்டு பிரதியை நான் எடுக்கவில்லை. காரணம் எனது கணவர் வீட்டில் இருந்து காணமல் போயுள்ளார் என நான் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் வெளியில் சென்றவேளை காணமல் போனதாக முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். இதனால் நான் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை  மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார் எனவே எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் எனது கணவரை கண்டுபிடித்துத்தாருங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்…

SHARE

Author: verified_user

0 Comments: