3 Aug 2015

விபத்தில் 42 பேர் காயம்

SHARE

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதேசத்தில்  திங்கட்கிழமை அதிகாலை வேளையில் தனியார் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 42 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 65 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த இந்த பஸ் வண்டியின் டயர் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து குடைசாய்ந்தது.


காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகள், பொலன்னறுவை வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிறு காயங்களுக்குள்ளான சிலர்  சிகிச்சை பெற்றுக்கொண்டு வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: