10 Aug 2015

15 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் சேருவில சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 15 கடை உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


மூதூர், சேருவில பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பலசரக்குக் கடைகள், வெதுப்பகங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 



இதன்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்தமை, காலாவதியான உணவுப் பண்டங்களை வைத்திருந்தமை, சுகாதாரம் அற்ற முறையில் உணவுகளை தயாரித்திருந்தமை, பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு சிட்டுத்துண்டு இடப்படாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.முஹம்மது அலியார் தெரிவித்தார். 



இவர்களை இந்த மாதம் 13ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாகவும் தற்போது இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: