25 Jul 2015

பதவிக்காக உண்மைக்கு புறம்பாக செயற்படுவதா? - வேட்பாளர் ஆ .ஜோர்ஜ் பிள்ளை

SHARE

தமிழ்  தேசிய கூடமைப்பின்  வேட்பாளரும்  முன்னால்  பாராளுமன்ற  உறுப்பினரருமான   பொன் . செல்வராசா வினால்  வெளியிட்டுள்ள  அவரது  துண்டு பிரசுரத்தில்  மட்டக்களப்பு  விமான நிலைய  விஸ்தரிப்பு  நஷ்டஈடூ கொடுப்பனவு  சுமார்  நாலரைக்கொடி  ரூபாவை  13 நட்களில்  பெற்று கொடுத்துள்ளதாக  அப்பட்டமான  பொய்  தகவலை  வெளியிட்டுள்ளார் 

. இதனை  நான் முற்றாக  மறுக்கிறேன் . 1987 ம்  ஆண்டு  மட்டக்களப்பு  விமான  நிலைய  விஸ்தரிப்புக்காக 350 குடும்பங்கள்  வெளியேற்றப்பட்டு  அவர்களது  காணிகளும்  குடியிருப்புக்களும்  சுவிகரிக்கப்பட்டது.  பாதிக்கப்படவர்களின் நலன் கருதி   மட்டக்களப்பு  விமான  நிலைய  விஸ்தரிப்பால்  பாதிக்கப்பட்டோர்  சங்கம்  உருவாக்கப்பட்டு  சங்கத்தின்  தலைவராக  நான் செயற்பட்டேன்  அச்  சங்கத்தின்  ஊடாக  பல  நஷ்ட   ஈடூ  கொடுப்னவிற்க்காக   கோரிக்கையை  விடுத்து  இறுதியாக  நாம்  மட்டக்களப்பு  மண்முனை  வடக்கு  பிரதேச  செயலகத்திற்கு  முன்பாக  மறியல்  போராட்டத்தினை  நடத்தினோம் . இதில்  பதிக்கப்பட்ட  அனைவரும்  கலந்தது  கொண்டனர்  இதன் போது  பல  பாராளுமன்ற  உறுப்பினர்கள்  தங்களது  அரசியல்  லாபம்  கருதி  அவ்  இடத்திற்கு  சமூகமளித்தனர் .சுமார்  15 ஆண்டுகளுக்கு  மேலாக  பாதிக்கப்பட்ட வர்களுக்கு  நஷ்ட ஈடூ  கிடைக்க  பெறவில்லை   மட்டக்களப்பு   பாராளுமன்ற  உறுப்பினர்கள் பலர் இருந்தும்  எவ்வித  துரித  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை  எமது பா திக்கப்படோர்  சங்கத்தின் தொடர்  போரா ட்டம்  காரணமாக  நஷ்ட  ஈடூ  கொடுப்பனவுக்கான  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டது . 
 
உண்மைக்கு  புறம்பான  தகவல்களை  தெரிவித்து  மக்களிடம்  வாக்குகளை  கேட்பது  அவரது  கையாலகாத  தன்மை  என பாராளுமன்ற      வேட்பாளரும்  தமிழ்  மக்கள்  விடுதலை  புலிகள்  கட்சியின்  பிரதி  செயலாளருமான  ஆ .ஜோரஜ் பிள்ளை  தெரிவித்துள்ளார் 
SHARE

Author: verified_user

0 Comments: