வெல்லாவெளி பிரதேச செயலாக பிரிவுக்கு உட்பட்ட திக்கோடை கிரமத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி யுவதி ஒருவர் நேற்று (29) படுகாயமடைந்துள்ளார்.
திக்கோடை தும்பாலையில் வசிக்கும் சின்னத்தப்பி நவரெத்தினம் 52 வயசு ஐந்து பிள்ளைகளின் தந்தையே மேற்படி சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
தனது வீட்டில் நித்திரை விட்டு எழுந்து வெளியில் வந்தபோது வாசலில் இருந்த யானையே தாக்குதலை மேற்கொண்டுள்ளது. காலை 6 மணி அளவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து கிரமவாசிகளின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மற்றப்ட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல் ஊடாக அறியமுடிகின்றது
0 Comments:
Post a Comment