ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் இன்று அம்பாறை நகரில் இடம்பெற்றது.
மாலை 3 மணிக்கு ஆரம்பித்த கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் பங்குபற்றி உரையாற்றினார். கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கட்சியின் வெற்றிக்காக அனைத்து இன மக்களும் உறுதியுடன் வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருகைக்கு முன் கூட்டமேடையிலிருந்து இறங்கி அக்கரைப்பற்றில் இடம்பெறவிருந்த திருமண நிகழ்வில் பங்கு கொள்வதற்காய் உடன் சென்றார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்.
முதன்மை வேட்பாளர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் சென்றதன் பின்னரே இக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஸ வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சரின் ஊடகப்பிரிவிடம் இது குறித்து வினவிய போது,
ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் மஹிந்தவின் மேடையில் அமரந்துள்ளதாகவும், அவருடன் இன்னும் சகவாசம் வைத்திருப்பதாகவும் ஒரு சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். உண்மையில் நடந்தது இதுதான்,
திருமண நிகழ்வு அஸர் தொழுகை அதானை பின் தொடர்ந்து அக்கரைப்பற்றில் இடம்பெற்றது, மஹிந்த மேடையில் ஏறியது 4.30 க்கு அப்படியெனில் எப்படி மஹிந்தவோடு அமர்ந்திருப்பார்? பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வேட்பாளர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு
0 Comments:
Post a Comment