27 Jul 2015

தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஒற்றுமையின் சின்னம்

SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலரை பாராளுமன்ற கதிரைகளுக்கு அனுப்புவதற்காகவோ, சிலரது பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்டதல்ல என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுகு மட்டுமே வாக்களிக்குமாறு பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய அபிமானிகளிடையே ஒருவித சந்தேகம் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. 


தமிழ்த் தேசிய அபிமானிகள் தொலைபேசி ஊடாகவும் நான் செல்லுமிடமெங்கும் நேரடியாகவும் என்னிடம் இதுகுறித்து வினவுகின்றனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியில் தமிழ் உணர்வாளர்களிடம் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை பட்டியலில் உள்ள தமிழரசுக் கட்சியின் மூவரை தெரிவு செய்யுங்கள் என்று வழங்கிய செவ்விதான் தமிழ் தேசிய உணர்வாளர்களிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் குத்துவெட்டா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 விருப்புவாக்கு தேர்தல் முறையில் ஓரேகட்சி வேட்பாளர்களிடையே கூட முரண்பாடுகள் வழமையெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை நிகழாதவொன்று. குறுக்கு வழியில் இலகுவாக பாராளுமன்றக்கதிரைகளை அனுபவித்த, அனுபவிக்க விரும்புவோர் சிலரும் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில்  இறுதிக்குழப்பத்தில் உள்ளீர்க்கப்பட்டமையின் விளைவுகளே இவை. உண்மையில் நாங்கள் - நான் உட்பட எம் பட்டியலில் உள்ள பெரும்பாலானோர் எனது இலக்கத்திற்கு ஒன்றையும் எம்பட்டியலில் உள்ள நீங்கள் விரும்பும் இருவருக்கோ, அல்லது எம் பட்டியலில் உள்ள எவரையேனும் விரும்பவில்லையெனில் நீங்கள் நேசிக்கும் வீட்டுச்சின்னத்திற்கோ வாக்களியுங்கள் என்றவாறே எமது பிரசாரம் அமைகின்றது.

 மாறாக தனிப்பட்ட கட்சியடிப்படையிலோ குழுவாகவோ மூவர் இணைந்து மற்றவருக்கு குழுpபறிக்கும் வகையிலோ எமது பிரசாரம் இன்று மட்டுமல்ல என்றுமே இருந்ததில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலரை பாராளுமன்ற கதிரைகளுக்கு அனுப்புவதற்காகவோ, சிலரது பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஒற்றுமையின் சின்னம் ஒற்றுமையின் பலம் தமிழ்த் தேசிய உணர்வுகளின் சங்கமம் தமிழர்களின் ஒருமித்தகுரல் நேற்றல்ல இன்றல்ல என்றும் இவ்வாறு இருக்கவேண்டுமென்பதற்காகவே தலைவர் பிரபாகரன் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுதக்குழுக்களையும் அகிம்சை வழி நடந்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியையும் (இன்றை தமிழரசுக்கட்சி)இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை காலத்தின்கட்டாயம் கருதி உருவாக்கினார்.  

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கூட காந்தியும் நேதாஜியும் இறுதிவரை இணையவில்லை. இலங்கையில் இவை இரண்டும் இணைந்தது இது இங்கு தேவை இதனாலேயே இது உருவாகியது இத்தகைய வரலாறு எதுவும் தெரியாது வரலாறு எதுவும் புரியாது தமிழர் தம்துயர வரலாற்றில் வாழாது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏதோ ஒரு வழியில்ஏதோ ஒரு விபத்தில் உள்நுழைந்தவர்களால் ஏற்படும் குழப்பங்களே இவை. வரலாற்றை சற்று பின்நோக்கி பாருங்கள் இவை இயல்பென்று நீங்களே உணர்வீர்கள். சேரனும் சோழனும் பாண்டியனும் என்று இருந்தான் ஒற்றுமையாக. அவர் பரம்பரை பதவிவெறி  கொண்டவர்கள் இவர்கள் எப்படி இருப்பார்கள் ஒற்றுமையாக. அவர்களது குணம் தம்மையறியாமலே இவர்களிலும் வெளிப்படும்தானே இதை உணர்ந்து இவர்களை புறம்தள்ளி தமிழ்த் தேசிய உணர்வோடு சிந்தியுங்கள் செயற்படுங்கள். இவர்களை வரலாறு மன்னிக்கட்டும்


SHARE

Author: verified_user

2 Comments:

Mukunthan said...

குடிகாரனைப் போல் ஒவ்வாெரு நேரத்துக்கு ஒவ்வொரு பேச்சு. கட்சிக்குள் வெட்டுக்கொத்து அதன்பின் ஒற்றுமை என்று மக்களை உன் அரசியல் இலாபத்துக்கு ஏமாற்றுவது.
http://www.battinews.com/2015/07/blog-post_690.html?m=1

Shiva Sampanthan said...

நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624