26 Jul 2015

குழாய் பொருத்துனர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதற்கான நேர் முகப்பரீட்சை

SHARE

எம்.எஸ்.எம்.சறூக்

என்.வி.கியூ ((NVQ)  தராதரமுள்ள பயிற்சி பெற்ற குழாய் பொருத்துனர்களுக்கு (Plumbers)  அனுமதி பத்திரம் வழங்குவதற்கான நேர் முகப்பரீட்சை எதிர் வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய சேவை நிலையம் (கிழக்கு) திருகோணமலை அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது. 


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய சேவை நிலையத்தினால் (கிழக்கு) நாடத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட என்.வி.கியு  (NVQ)  தராதரமுள்ள குழாய் பொருத்துனர்களுக்கான (திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த) பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரமே இந்த நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சமூகவியலாளர். எம்.எஸ்.எம்.சறூக் தெரிவித்துள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: