கிழக்கில் சின்னக் கத்திர்காமம் என அழைக்கப்படும் ஸ்ரீ தாந்தாமலை முருகன் அலயத்திற்கு 4 வது முறையாக பாத யாத்திரையாகச் செல்வதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இதன் எற்பாட்டாளர் ஏ.ராயூ தெரிவித்தார்.
புதன் கிழமை (29) அதிகாலை 5 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து யாத்திரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதில் இணைந்து கொள்ளும் பக்கதர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு வந்து சேருமாறும் மேலதிக விபரங்கள் தேவைப் படுபவர்கள், 0779898006, 0770846712 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீ தாந்தாமலை ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 11.07.2015 அன்று கொடியேற்றத்துமடன் ஆரம்பமாகி எதிர் வரும் 01.08.2015 அன்று காலை நடைபெறும் தீத்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment