9 Feb 2015

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நல்லெண்ண அனுபவப் பகிர்வு

SHARE
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொஞ்சி மாவட்டக் கிளை உறுப்பினர்கள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக்கு சனிக்கிழமை (07) நல்லெண்ண அனுபவப் பகிர்வு வியஜம் ஒன்றினை மேற் கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் பரஸ்பர அனுபவப் பகிர்வுகள் இடம்பெற்றது.

கிளிநொச்சி, மற்றும், மட்டக்களப்பு, ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் செஞ்சிலுவைச் செயற்பாடுகளுக்கு, கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்கள், எதிர் காலத்தில் முன்நெடுக்கபட்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும் இதன்போது கிளிநொச்சி மாட்ட செஞ்சிலுவைத் தொண்டர்களுக்கு மட்டக்களப்பில் நீச்சல் பயிற்சி வழங்குதல், மேற்படி இரண்டு மாவட்டங்களிலுமுள்ள தொண்டர்களை வலுப்படுத்தல், தொண்டர் பயிற்சி முகாம்களையும், எதிர் காலத்தில் முன்நெடுக்கவும், இதன்போது திட்டமிடப்பட்டதாக, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத்தலைவர் த.வசந்தராசா கூறினார்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சிக் கிளை தலைவர் சு.தருமரெத்தினம், உள்ளிட்ட குழுவினரும் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா உள்ளிட்ட குழுவினரும், இதில் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: