7 Feb 2015

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு - இராணுவ வீரர் பலி

SHARE
காத்தான்குடி - 5ம் குறிச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை பள்ளிவாயல் ஒன்றில் நடைபெற்ற வைபவமொன்றில் கடமையிலிருந்தபோதே குறித்த இராணுவ வீரர் இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவர் கோவில்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சக இராணுவ வீரர்கள் சென்றதன் பின்னர் இவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில், மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருணாரத்ன என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: