29 Jan 2015

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஆண்டாக 2015 வாகரை பிரதேச செயலகம் பிரகடனம்

SHARE
சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஆண்டாக 2015ஐ ஆம் ஆண்டை கோறளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வாகரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட  மக்களின் தேவையினை அறிந்து அத்தேவையினை பூர்த்தி செய்ய முந்திக்கொண்டு நியாயமான  செயற்திட்டங்களை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கும் நோக்கில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும்  அரச செயற்திட்டங்களுக்கு மேலதீகமாக கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட  மக்களின் தேவையினை அறிந்து அத் தேவையினை பூர்த்தி செய்ய முந்திக்கொண்டு நியாயமான  செயற்திட்டங்களை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகியின் பூரண வழிகாட்டலின் கீழ்  முன்னெடுக்கப்படவுள்ள இம்மாநாடு தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சுயதொழில் முயற்சியினுடாக தாம் பெறும் பொருளாதார ஸ்திர தன்மையினூடாக  சுயமாக தாம் வாழும் குடும்பத்தில்  தமது பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும்,போஷாக்கு நிறைந்த சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கொண்ட சுபிட்சமிகு குடும்பத்தினூடாக சுபிட்சமிகு கிராமத்தினை  உருவாக்குவதே இவ் மாநாட்டின் குறிக்கோளாகும்.

இச்சுயதொழில் முயற்சியாளர்களினை மேம்படுத்துவதற்காக கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில்   கடன் வழங்கிய, கடன் வழங்கி வருகின்ற  அரச நிறுவனங்களான வாழ்வின் எழுச்சி தினைக்களம், சமூக சேவைத் திணைக்களம், கிராம அபிவிருத்தி திணைக்களம், சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி அமைச்சு என்பனவும் இதில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலில், கடன் வழங்கும் நிறுவனங்களான பிறண்டினா, கொமர்ஸ்சல் கிரடிட், எல்ஓஎல்சி,விசன்பண்லங்கா, அரச சார்பற்ற நிறுவனங்களான உலக தரிசன நிறுவனம், எஸ்கோ, கேபிஎன்டீயு, கரையோரம் பேணல் திணைக்களம், அகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்  மற்றும் பிரதேச செயலகத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள், பிரதேச சபை செயலாளர், மற்றும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார உத்தியோகத்தர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.
Vakarai 2

Vakarai 3
SHARE

Author: verified_user

0 Comments: