மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசமட்ட இலக்கிய விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (14) காலை 9.31 மணிக்கு போரதிவுப் பற்று பிரதே செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக போரதிவுப் பற்று பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி பக்தகௌரி மயூரவரதனன் இன்று புதன் கிழமை (12) அறிவித்துள்ளார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் அசோகா, கவிஞர் த.ருத்திரா, போரதீப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.சண்முகநாதன் உட்பட பலர் பகலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது 2013, மற்றும் 2014 அகிய இரு ஆண்டுகளிலும், போரதிவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட கவிதை எழுதுதல், கவிதை பாடல், கையெழுத்துப்போட்டி, கட்டுரை, பாடல்ஆக்கம், நாட்டார் கலை ஆற்றல், விவரணம், சிறுகதை, சிறுவர் கதை எழுதுதல் போன்ற பல போட்டிகளில் முதலாம், இரண்டாம் மூன்றாம், இடங்களைப் பெற்ற மொத்தம் 45 பேருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப் படவுள்ளதாகவும், போரதிவுப் பற்று பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி பக்தகௌரி மயூரவரதனன் தெரிவித்துள்ளார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் அசோகா, கவிஞர் த.ருத்திரா, போரதீப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.சண்முகநாதன் உட்பட பலர் பகலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது 2013, மற்றும் 2014 அகிய இரு ஆண்டுகளிலும், போரதிவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட கவிதை எழுதுதல், கவிதை பாடல், கையெழுத்துப்போட்டி, கட்டுரை, பாடல்ஆக்கம், நாட்டார் கலை ஆற்றல், விவரணம், சிறுகதை, சிறுவர் கதை எழுதுதல் போன்ற பல போட்டிகளில் முதலாம், இரண்டாம் மூன்றாம், இடங்களைப் பெற்ற மொத்தம் 45 பேருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப் படவுள்ளதாகவும், போரதிவுப் பற்று பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி பக்தகௌரி மயூரவரதனன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment