மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தின் பொது நூலகத்திற்குரிய புதிய கட்டிடம் கடற்கரை வீதியில் நிருமாணிக்கப்பட்டு கட்டிட வேலைப்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப் பட்டுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிழக்கின் உதயம் வேலைத் திடத்தின் கீழ் 5 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டிடம் அமையப் பெற்றுள்ளது.
இருப்பினும் இப்புதிய நூலக் கட்டிடத்தை மிக விரைவில் திறந்து வைக்கவுள்ளதாகவும், திறப்பு விழாவுக்குரிய திகதி இதுவரை தீர்மானிக்கப் படவில்லை எனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன் கூறினார்.
தற்போது களுவாஞ்சிகுடி கிராமத்திற்குரி பொது நூலகம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியிலுள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment