(வராதன்)
மட்டக்கப்பு மாவட்டத்தில் திராய்மடு கிராமத்தை ஊடறுத்து செல்லும் புகையிரத
பாதை உரிய முறையில் அமைக்கப்படாமையால் வீதியை நாளாந்தம் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கானவர்கள்
தினமும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.புகையிரத பாதையை கடந்து செல்ல வேண்டும் என்றால் சைக்கிள் மோட்டார் சைக்கிள்
என்பவற்றறை தூக்கி கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
இதனால் சாதாரண பயணிகளும் பொருட்களை எடுத்து செல்பவர்களும் பாரிய கஸ்ரங்களை
எதிர்கொண்டு வருகின்றனர். இதனை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை
எடுக்கப்படாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது.
எனவே
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதியினை சீர் செய்துதர மிகவிரைவில்
முன்வருமாறு அப்பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment