கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை புதன்கிழமை (17.10.2012) காலை ஆரம்பமாகுமென பல்கலைக் கழக்த்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த பல்கலைக் கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை புதன்கிழமை (17.10.2012) ஆரம்பிக்கப்படுகின்றது என அவர் கூறினார்.
நாளை புதன்கிழமை (17.10.2012) காலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழகத்திற்கு சமூகமழிப்பதோடு வகுப்புக்களுக்கும் சமூகமளிக்குமாறும் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா மாணவர்களைக் கேட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment